திமுக தலைவர் பதவியிலிருந்து விலக கருணாநிதி விருப்பம்
சென்னை:
கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விரைவில் விலகப் போவதாகவும், கட்சியை இளைஞர்களின் கையில்ஒப்படைக்கப் போவதாகவும் திமுக தலைவர் கருணாநிதி சூசகமாக தெரிவித்துள்ளார்.
மதுரைக் கஞ்சித் தொட்டித் திறப்பின் போது ஏற்பட்ட மோதலைக் கண்டித்து தமிழகம் முழுவதிலும் (மதுரைநீங்கலாக) திமுகவினர் நேற்று (திங்கள்கிழமை) கண்டனப் பேரணியை நடத்தினர்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நடந்த பேரணியை கருணாநிதி பார்வையிட்டார். பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில்,
இளைஞர்களுக்கு கட்சியில் பொறுப்புகளை வழங்க நானும், மூத்த தலைவர்களும் முடிவு செய்துள்ளோம்.
நானும், அன்பழகனும், ஆற்காடு வீராசாமியும் கட்சிக்குப் புது ரத்தம் கொடுக்கும் பொறுப்பில் இருக்கிறோம்.அந்தக் கடமையை நாங்கள் தட்டிக் கழித்து விட முடியாது. விரைவில் அந்தக் கடமையை நாங்கள்நிறைவேற்றுவோம்.
என்னை நிரந்தரத் தலைவர் என்று வாழ்த்தி தொண்டர்கள் கோஷமிடுகிறார்கள். யாருமே எப்போதுமே நிரந்தரமாகஇருப்பதில்லை. நானும் கூட அதற்கு உட்பட்டவன் தான். இயற்கை அதை அனுமதிக்காது. எல்லாவற்றிற்கும் ஒருமாற்று ஏற்பாடு இருக்கும்.
கட்சியின் ஆலோசகராக தொடர நான் விரும்புகிறேன். சர்வாதிகாரப் போக்கில் கட்சியின் தலைமைப் பொறுப்பில்நானே தொடர்ந்து நீடிக்க விரும்பவில்லை.
அதிக அரசின் கையில் சிக்கி சட்டம், ஒழுங்கும் படாத பாடு படுகின்றன. தவறுகளை இந்த அரசுத் திருத்திக்கொள்ளாத பட்சத்தில் நேருக்கு நேர் மோதவும் திமுக தயாராக உள்ளது என்றார் கருணாநிதி.