For Daily Alerts
Just In
அன்ன தானம்: திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சம்பளத்தை அளித்தார் ஜெ.
சென்னை:
கோவில் அன்னதானத் திட்டத்திற்காக திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோவிலுக்கு தனது ஜூன்மாத சம்பளத்தை முதல்வர் ஜெயலலிதா நன்கொடையாக வழங்கியுள்ளார்.
தனது ஒவ்வொரு மாத சம்பளத்தையும் ஒரு கோவிலுக்கு நிதியுதவியாக வழங்கி வருகிறார் ஜெயலலிதா. இதுவரை3 கோவில்களுக்கு அவர் நிதியுதவி செய்துள்ளார்.
இந்நிலையில் தனது ஜூன் மாத சம்பளமான ரூ.10,000த்தை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசுவாமிதிருக்கோவிலின் அன்னதானத் திட்டத்திற்கு வழங்கியுள்ளார் முதல்வர்.
கோவில் நிர்வாக அதிகாரி பெருமாள் சாமி இதற்கான காசோலையை சென்னை வந்து ஜெயலலிதாவிடம் பெற்றுக்கொண்டார்.
Comments
Story first published: Sunday, June 24, 2001, 5:30 [IST]