கோர்ட் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு: பொதுமக்கள், வக்கீல்கள் கடும் பாதிப்பு
சென்னை:
நீதிமன்றக் கட்டணங்களை தமிழக அரசு திடீரென கடுமையாக உயர்த்தியுள்ளது. இதனால் வழக்கு தாக்கல் செய்யவந்த வக்கீல்களும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
கோர்ட் கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருப்பதாக நேற்று (புதன்கிழமை) காலை திடீரென சுற்றறிக்கை வந்தது.இதனால் வக்கீல்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். அதேபோல, வழக்குத் தாக்கல் செய்ய வந்த பொதுமக்களும்அதிர்ந்தனர்.
மேலும், புதிய கட்டணம் கடுமையாக இருந்ததால் வக்கீல்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர். அவர்களுக்குஆதரவாக பொதுமக்களும் கோர்ட் வளாகங்களில் குரல் கொடுத்தனர்.
முன்பிருந்த கட்டணத்தை விட பல மடங்கு அளவுக்குப் புதிய கட்டணம் உள்ளது. பொது நலன் கருதி தாக்கல்செய்யப்படும் ரிட் மனுக்களுக்கு இதுவரை ரூ.50 பதிவுக் கட்டணமாக இருந்தது. இது இப்போது ரூ.500 ஆகஉயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல ஒவ்வொரு கட்டணமும் பல மடங்குகளாக உயர்த்தப்பட்டுள்ளன.
புதிய கட்டணத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் உடனடியாக வருவாய்த்துறை அமைச்சர் தளவாய்சுந்தரத்தை சந்தித்து மனு கொடுத்தனர்.
இன்று சட்டத்துறை அமைச்சர் பொன்னையனை சந்தித்து மனு கொடுக்கவுள்ளனர். முதல்வரையும் வக்கீல்கள்சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications