வருகிறார்கள் கெளரவ ஆசிரியர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் அரசுக் கல்லூரி ஆசிரியர்களின் போராட்டம் இன்று 4வது நாளை எட்டியது. இதனால் அரசுக் கல்லூரிகள் கடந்த நான்குநாட்களாக ஸ்த்ம்பித்துப் போய் உள்ளன.

இந் நிலையில் இந்தப் போராட்டத்தை முறியடிக்க அரசுக் கல்லூரிகளுக்கு உடனடியா 720 கெளரவ ஆசிரியர்களை (Honorary lecturers)நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அரசுக் கல்லூரிகளில் 720 ஆசியர்கள் பதவி காலியாக இருந்து வருகிறது. இதுவரை இந்த இடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்காமல்இருந்து வந்த தமிழக அரசு இப்போது அவசர அவசரமாக ஆசிரியர்களை நியமிக்கத் திட்டமிட்டுள்ளது.

அவர்களையும் கெளரவ ஊதியத்தில் நியமிக்கத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் ஆசிரியர்கள் போராட்டத்தை முறியடிக்க முயற்சிக்கிறது.ஆனால், திடீரென நியமிக்கப்படும் ஆசிரியர்களால் மாணவர்களுக்கு உரிய முறையில் கல்வி போதித்துவிட முடியுமா என்றுதெரியவில்லை.

அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைப்பதை எதிர்த்து இந்தப் போராட்டம் நடந்து வருகிறது.கல்விக் கட்டணம் உயரும் என்பதால் மாணவர்களும் இந்தப் போராட்டத்தை ஆதரித்துள்ளனர். மாணவர்களும்ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கெளர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டாலும் மாணவர்கள் அவர்களது வகுப்புகளுக்குச் செல்வார்களா என்பதுசந்தேகம் தான்.

இந் நிலையில் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவது தொடர்பாக இன்று அரசுக் கல்லூரி ஆசிரியர் போட்டக்குழுவின் நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடக்கிறது.

இதன் தலைவர் தலைவர் சுவாமிநாதன் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், போராட்டத்தைமதிக்காமல் அரசு தொடர்ந்து அலட்சியமாக நடந்து கொண்டால் போராட்டம் மிகவும் தீவிரமடையும் எனஎச்சரித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+