கட்சிக்கு தடை விதித்ததை எதிர்த்து நெடுமாறன் வழக்கு
சென்னை:
தமிழர் தேசிய இயக்கத்திற்குத் தடை விதித்ததை எதிர்த்து அதன் தலைவர் பழ. நெடுமாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
நெடுமாறன் கடந்த 1ம் தேதி பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில்அடைக்கப்பட்டுள்ளார். அவரது கட்சியான தமிழர் தேசிய இயக்கத்துக்கும் பின்னர் தடை விதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த 25ம் தேதி அவருடைய கட்சி அலுவலகமும் பத்திரிக்கை அலுவலகமும் போலீசாரால் சீல்வைக்கப்பட்டன.
இந்த நிலையில் தனது கட்சியை தமிழக அரசு தடை செய்தது சட்ட விரோதமானது என்று அறிவிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் நெடுமாறன் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,
கிரிமினல் திருத்தச் சட்டம் 15(2), 16(1) ஆகிய பிரிவுகளின் கீழ் எனது அரசியல் கட்சியைத் தடை செய்ததுசெல்லாது என்று கோர்ட் அறிவிக்க வேண்டும். இந்தப் பிரிவுகளையும் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.
இலங்கையில் வாழும் தமிழர்களின் துயர் குறித்து தான் எனது கட்சி பிரசாரம் செய்து வந்தது. மக்களிடமும் எடுத்துவைத்தது. பேச்சுரிமை ஜனநாயகத்தின் முக்கிய அம்சம். எனது கட்சிக்கு எதிராக அரசு கூறியுள்ள வாதங்கள்அனைத்தும் தவறானவை, அடிப்படை இல்லாதவை, சட்டவிரோதமானவை.
எனது கட்சி விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படவில்லை. மேலும், இந்தியாவில் உள்ள எந்தப்பகுதியையும் பிரித்து தனி நாடாக்க வேண்டும் என்று நாங்கள் கூறியதுமில்லை. இது மாதிரியான கருத்தை எனதுகட்சியினரும் எங்கும் கூறியதில்லை.
அரசு நடவடிக்கை ஒரு அதிகார துஷ்பிரயோகம். எனவே அரசின் தடையுத்தரவை செல்லாது என்று கோர்டஅறிவிக்க வேண்டும் என்று தனது மனுவில் கூறியுள்ளார் நெடுமாறன்.
மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி தினகரன், அடுத்த கட்ட விசாரணையை செப்டம்பர் 2ம் தேதிக்குஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications