நெடுமாறனுக்கு செப்.24 வரை காவல் நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனுக்கு அடுத்த மாதம் 24ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகக் கருதப்படும் நெடுமாறன் கடந்த 1ம் தேதி பொடா சட்டத்தின் கீழ்கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவருடைய நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து நெடுமாறன் இன்று காலைசென்னை-பூந்தமல்லியில் உள்ள பொடா தனி நீதிமன்றத்துக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டார்.
நெடுமாறனை அடுத்த 24ம் தேதி வரை சிறையில் அடைக்குமாறு பொடா தனி நீதிமன்ற நீதிபதி எல். ராஜேந்திரன்உத்தரவிட்டார்.
இதையடுத்து நெடுமாறன் மீண்டும் கடலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.












Click it and Unblock the Notifications