ராமநாதபுரம் அருகே கார்-லாரி மோதல்: அதிமுக செயலாளர் உள்பட 3 பேர் பலி
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே டாடா சுமோ காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் அந்நகர அதிமுகசெயலாளர் உள்பட 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
ராமநாதபுரம் நகர அதிமுக செயலாளரான வேலு தன்னுடைய நண்பர்களுடன் டாடா சுமோ காரில் சென்றுகொண்டிருந்தார்.
வாலாந்துறை அருகே சென்று கொண்டிருந்த போது அந்தக் கார் மீது செங்கல் ஏற்றி வந்த லாரி நேருக்கு நேர்பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் டாடா சுமோ கார் சுக்கு நூறாக நொறுங்கியது. இதில் வேலு உள்பட 3 பேர் உடல் நசுங்கிபரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் அருகே விபத்தில் 3 பேர் பலி:
இதற்கிடையே சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
ஆத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் தன்னுடைய இரண்டு நண்பர்களுடன்மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்த் திசையில் வந்து கொண்டிருந்த ஒரு டெம்போ படு வேகத்துடன் மோட்டார் சைக்கிளில்மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த மூவருமே லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கிஉயிரிழந்தனர்.
விபத்து குறித்து ஆத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications