நாளை முதல் பிள்ளையார் பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா
Subscribe to Oneindia Tamil
பிள்ளையார்பட்டி:
புகழ் பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் இந்த ஆண்டுக்கான 10 நாள் விநாயகர் சதுர்த்தி விழாநாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது பிள்ளையார்பட்டி. மிகவும் பிரசித்தி பெற்ற இங்குள்ள பிள்ளையார் கோவிலில்விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடக்கும்.
அதன்படி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடியேற்றத்தைத்தொடர்ந்து விநாயகர் ஊர்வலம் நடக்கும்.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிள்ளையார்பட்டியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications