காவிரி: கர்நாடகத்தின் கோரிக்கை உச்ச நீதிமன்றத்தில் நிராகரிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

காவிரி வழக்கு தொடர்பான விசாரணையை அடுத்த 4 வாரத்திற்குத் தள்ளி வைக்குமாறு கர்நாடக அரசு விடுத்தகோரிக்கையை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு இன்றுவிசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது இவ்வழக்கு விசாரணையை அடுத்த நான்கு வார காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்றுகர்நாடக அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ஜாவெலி கேட்டுக் கொண்டார்.

ஆனால் அவரை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் வேணுகோபால், ஏற்கனவே காவிரியில்கர்நாடகம் தண்ணீர் திறந்து விடாததால் தமிழக விவசாயிகள் குறுவை சாகுபடி செய்யாமல், தற்போது சம்பாசாகுபடி செய்ய முடியாமலும் தவித்து வருகின்றனர். எனவே எக்காரணத்தைக் கொண்டும் விசாரணையைத்தள்ளிவைக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.

வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.என். கிர்பால் தலைமையிலான பெஞ்ச்,கர்நாடகாவின் கோரிக்கையை நிராகரித்தது.

மேலும் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே காவிரி விவகாரம் ஒரு முக்கியமான பிரச்சனை என்பதால்காவிரி நதியை அரசியல் சாசனத்தின் முக்கியப் பட்டியலில் சேர்க்க வழியுள்ளதா என்றும் மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.

ஒரு நதியிலிருந்து தண்ணீரைப் பகிர்ந்து பெறுவதில் மாநிலங்களுக்கிடையே எப்போதும் பிரச்சனை எழக்கூடும்என்பதால் நாட்டில் உள்ள அனைத்து நதிகளையுமே அரசியல் சாசனப் பட்டியலில் சேர்க்க முடியுமா என்றும் உச்சநீதிமன்றம் வினா எழுப்பியுள்ளது.

பின்னர் இவ்வழக்கின் விசாரணை நாளைக்குத் தள்ளிவைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+