நேர்மைக்குக் கிடைத்த பலன்: ஆட்டோ டிரைவருக்கு ஆட்டோ பரிசு
சென்னை:
ஒரிசாவைச் சேர்ந்த தொழிலதிபர்கள் ஆட்டோவில் தவற விட்ட ரூ. 12 லட்சம் பணத்தை நேர்மையுடன் போலீஸாரிடம் ஒப்படைத்தசென்னை ஆட்டோ டிரைவருக்கு, அதிமுக சார்பில் ரூ. 85 ஆயிரம் மதிப்பில் ஆட்டோ வாங்கித் தர கட்சியின் பொதுச் செயலாளர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
ஒரிசாவைச் சேர்ந்த சிலர் ஆட்டோவில் தவறுதலாக விட்டுச் சென்ற ரூ. 12 லட்சம் பணத்தை நேர்மையுடன், போலீஸாரிடம்ஒப்படைத்துள்ளார் சென்னையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மனோகரன்.
இந்த நேர்மையான செயல் குறித்து அறிந்த முதல்வர் ஜெயலலிதா மகிழ்ச்சியடைந்தார். மனோகரனின் செயலைப் பாராட்டினார்.
அவருக்கு பொருளாதாரரீதியில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற நினைத்த முதல்வர், தற்போது மனோகரன் வாடகைக்கு ஆட்டோ ஓட்டிவருவதை அறிந்தார். இதையடுத்து அதிமுகவின் அண்ணா அறக்கட்டளை சார்பில் ரூ. 85 ஆயிரம் மதிப்புள்ள ஆட்டோ ஒன்றை வாங்கித்தர உத்தரவிட்டுள்ளார்.
புதிய ஆட்டோ வாங்கியவுடன், மனோகரனை நேரில் அழைத்து முதல்வரே தனது கையால் புதிய ஆட்டோவை வழங்கவுள்ளார் என்றுஅதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications