ஆளை விடுங்கம்மா: ஜெவின் 3வது அணி குறித்து கம்யூனிஸ்ட்
டெல்லி:
பா.ஜ.க., காங்கிரசுக்கு எதிராக மூன்றாவது அணி அமைக்கலாம் என்ற ஜெயலலிதாவின் அழைப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிநிராகரித்துவிட்டது.
ஜெயலலிதாவுடன் கூட்டணி சேரத் தயாராக இல்லை என அந்தக் கட்சி தெளிவுபடுத்திவிட்டது.
அன்னியரான சோனியாவை பிரதமராக அனுமதிக்கக் கூடாது என்றும் சோனியா குறித்த தங்களது கருத்தை மீண்டும் ஆத்ம பரிசோதனைசெய்து பார்க்க வேண்டும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஜெயலலிதா அழைப்பு விடுத்தார்.
காங்கிரஸ், பா.ஜ.கவுக்கு மாற்றாக மூன்றாவது அணியை அமைக்க கம்யூனிஸ்ட்கள், சகோதரர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் உள்ளிட்டஎதிர்க் கட்சியினரின் ஆதரவைக் கோரப் போவதாகவும் ஜெயலலிதா கூறியிருந்தார்.
ஆனால், முரண்பாடுகளின் மொத்த உருவமான ஜெயலலிதாவுடன் கூட்டணி வைக்கத் தயாராக இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி கூறியுள்ளது.
இது குறித்து இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
மதவாதத்தை எதிர்ப்பதில் ஒத்த கருத்து கொண்டவர்கள் இணைந்து தான் கூட்டணி அமைக்க முடியும். தனிப்பட்ட ஒருவருக்கு எதிராக(சோனியாவுக்கு எதிராக) கூட்டணி சேர முடியாது. அதிலும் ஒருவரது பிறந்த நாட்டை மட்டும் பிரச்சனையாக்கி அதன் அடிப்படையில்எல்லாம் அணி அமைக்க முடியாது.
புதிய அணி உருவாக்க ஒரு வரையறை உண்டு. மதவாதம், மக்களுக்கு எதிரான முதலாளித்துவத்துக்கு ஆதரவான பொருளாதாரகொள்கைகள் போன்ற விவகாரங்களை எதிர்த்து தான் கூட்டணி உருவாக்க வேண்டும்.
மக்கள் பிரச்சனைகளில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் அதன் தலைவர்களும் என்ன கொள்கைகள் வைத்திருக்கிறார்கள் என்பது புதியஅணி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். அதைவிட்டு இவர் எங்கே பிறந்தார், அவர் எங்கே பிறந்தார் போன்ற மக்களை திசை திருப்பும்விவகாரங்களை வைத்துக் கொண்டு அணி அமைப்பதில் பலனில்லை.
இவ்வாறு மார்க்சிஸ்ட் கட்சி தனது அறிக்கையில் கூறியுள்ளது. இதன்மூலம் தேசிய அளவில் மூன்றாவது அணி என்ற ஜெயலலிதாவின்திட்டத்துக்கு பெரிய அடி விழுந்துள்ளது. (உண்மையிலேயே அவர் மூன்றாவது அணி அமைப்பதில் தீவிரமாக இருக்கிறாரா என்பதேசந்தேகத்துக்குரியது தான். பா.ஜ.கவுடன் தான் நெருங்குவதை திசை திருப்பவே அவர் இவ்வாறு பேசி வருவதாக எதிர்க் கட்சிகள்திட்டவட்டமாக நம்புகின்றன. பா.ஜ.கவும் ஜெயலலிதாவும் சேர்ந்த இந்த டிராமா போட்டு வருவதாக நம்பப்படுகிறது)