கர்நாடகத்தில் போராட்டம்: சாலை மறியல்
மாண்டியா:
காவிரியில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கர்நாடகத்தில் ஆங்காங்கேபோராட்டம் நடந்து வருகிறது.
காவிரி பாசனப் பகுதியான மாண்டியாவில் இன்று விவசாயிகளும், பள்ளி மாணவர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் பெங்களூர்- மைசூர் நெடுஞ்சாலையில் இன்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 1 மணி நேரம் இந்தச் சாலையில் இருபுறமும் எந்த வாகனமும் மாண்டியாவைத் தாண்டிச் செல்ல முடியவில்லை.
முதல்வர் கிருஷ்ணா இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாவட்டத்தில் உள்ள முட்டூர் நகரில் இன்றுபந்த்தும் நடந்தது.
கர்நாடக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் புட்டண்ணா நாளை இங்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். அதில் அடுத்த கட்டபோராட்டம் குறித்து இவர்கள் முடிவு செய்ய உள்ளனர்.
இவர்களின் பாாேட்டம் இப் பகுதி தமிழர்களுக்கு எதிராகத் திரும்பிவிடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில அரசின்பொறுப்பாகும்.