மிகுந்த நம்பிக்கையுடன் திறக்கப்படுகிறது மேட்டூர் அணை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

காவிரியில் கர்நாடகம் நீரைத் திறந்துவிடும் என்ற நம்பிக்கையில் நாளை மறுதினம் மேட்டூர் அணையை விவசாயத்துக்காகதிறந்துவிட தமிழக முதல்வர் ஜெயலலிதா செய்துள்ளார்.

கிட்டத்தட்ட 2 மாத கால தாமதத்துக்குப் பின் மேட்டூர் அணை திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேட்டூர் அணையில் இன்றைய நிலவரப்படி நீர் மட்டம் இன்று 66.89 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 18.82 கன அடிதண்ணீர் வந்து கொண்டுள்ளது.

இந்த நீர் காவிரி டெல்டா விவசாயத்துக்குப் போதுமானது அல்ல. இதனால் நீரைத் திறந்துவிடாமல் இருந்து வந்தது தமிழக அரசு.இதன் காரணமாக தஞ்சை உள்ளிட்ட பல்வேறு காவிரி ஆற்றுப் படுகை மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த குறுவை நெல்கருகிப் போய்விட்டது.

ஆனால், இன்று முதல் (புதன்கிழமை) தினமும் தமிழகத்துக்கு 1.25 டி.எம்.சி. தண்ணீர் விட வேண்டும் என கர்நாடகத்துக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

இதனால் கர்நாடகம் நீரைத் திறந்துவிடும் என்ற நம்பிக்கையில் மேட்டூர் அணையை 6ம் தேதி முதல் பாசனத்துக்காக திறந்துவிடமுடிவு செய்துள்ளோம். இதனால் விவசாயிகள் சம்பா நெல் பயிரை பயிரிட முடியும் என இன்று ஜெயலலிதா வெளியிட்டுள்ளஅறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆனால், நீதிமன்றத் தீர்ப்பை கர்நாடகம் புறக்கணித்தால் மேட்டூரில் இருந்து செல்லும் நீர் விழலுக்கு இறைத்த நீர் மாதிரிவீணாகிவிடும் என்பது குறிப்பிடத்தத்தது. தொடர்ந்து மேட்டூரில் இருந்து நீர் சென்று கொண்டிருந்தால் மட்டுமே சம்பா நெல்தப்பும்.

ஏற்கனே குறுவை நெல்லை கருக வைத்து தமிழக விவசாயிகளின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்ட கர்நாடகம் மீண்டும்தனது புத்தியைக் காட்டாமல் இருக்க வேண்டியது அவசியம்.

7ம் தேதி ஆணையக் கூட்டம்?:

இதற்கிடையே காவிரி நதி நீர் ஆணையத்தின் கூட்டத்தை வரும் 7ம் தேதி கூட்டலாம் என பிரதமர் வாஜ்பாய் யோசனைதெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆணையத்தைக் கூட்டி தமிழகத்துக்கு எவ்வளவு நீர் விடுவது என்று பிரதமர் முடிவு செய்ய வேண்டும், அதுவரைதமிழகத்துக்கு தினமும் 1.25 டி.எம்.சி. நீரைத் திறந்துவிட வேண்டும் என கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து இந்தக் கூட்டத்தை வரும் 7ம் தேதி கூட்ட வாஜ்பாய் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. சில தினங்களுக்கு முன்நடந்த இதே காவிரி ஆணையக் கூட்டத்தில் தான் தமிழகத்துக்கு நீரைத் திறந்துவிட முடியாது என கர்நாடகம் கூறியது.

பிரதமர் வாஜ்பாயும் இந்த விஷயத்தில் கர்நாடகத்தை வற்புறுத்தவில்லை, அம் மாநில முதல்வர் சொன்னதை மட்டுமே கேட்டுக்கொண்டார். தமிழகத்துக்குத் தண்ணீர் விட வேண்டும் என வாஜ்பாய் உத்தரவிடவில்லை.

இந் நிலையில் மீண்டும் ஆணையத்தைக் கூட்டி தமிழகத்துக்கு எவ்வளவு நீர் விடுவது என்பது குறிதது பிரதமர் வாஜ்பாய் இறுதிமுடிவு எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+