வந்தது மழை: சென்னை ஏரிகளில் நீர் மட்டம் உயர்வு
சென்னை:
சென்னை நகரில் திடீரென சில நாட்களாக நல்ல மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் நகருக்கு குடிநீர் வழங்கும்ஏரிகளில் தண்ணீர் மட்டம் வெகுவாக உயரத் தொடங்கியுள்ளது.
சென்னை நகரிலும் சுற்றுப் பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவுநேரங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்கிறது. பகல் நேரங்களிலும் வெயிலின் கொடுமை குறையஆரம்பித்துள்ளது.
இந்த மழையால் சென்னை மக்கள் மட்டுமல்லாது, குடிநீர் வாரியஅதிகாரிகளும் கூட மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளான புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழாவரம், செங்குன்றம் ஆகியஏரிகளில் நீர்மட்டம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
அனைத்து ஏரிகளிலும் சேர்த்து தற்போது மொத்தம் 235 கோடி கன அடி நீர் இருப்பு உள்ளது. மழை நீடித்தால்நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும்.
இதற்கிடையே, இரவில் பெய்த கன மழை மற்றும் இடி, மின்னலுக்கு நான்கு குடிசை வீடுகள் சேதமடைந்தன. இடிவிழுந்து இந்த நான்கு வீடுகளும் கருகிவிட்டன.
நகரின் தாழ்வான பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளன. வேளச்சேரி பகுதியில் மின்சார டிரான்ஸ்பார்மர் மீது இடிவிழுந்ததில் அந்தப் பகுதியே இருளில் மூழ்கியது.