டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் இளங்கோவனுக்கு நோ-என்ட்ரி
டெல்லி:
தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் அவசர பயணமாக காலை டெல்லி சென்றார்.
அங்கு வழக்கமாக தங்கும் தமிழ்நாடு இல்லத்துக்கு பெட்டியுடன் சென்ற அவரை இந்த முறை உள்ளே அனுமதிக்கஅதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதையடுத்து கடும் வாக்குவாதத்துக்குப் பின் அவர் அங்கிருந்து வெளியேறி வேறுஇடத்தில் தங்கினார்.
சோனியா- ஜெயலலிதா இடையிலான மோதலில் முதல்வர் ஜெயலலிதாவை இளங்கோவன் அவரது பழையபெயர்களை எல்லாம் சொல்லிக் காட்டி வெறுப்பேற்றினார்.
இதனால் இளங்கோவன் மீது பயங்கர கடுப்பில் இருக்கும் ஜெயலலிதா அவருக்கு இனிமேல் டெல்லி தமிழ்நாடுஇல்லத்தில் இடம் தர வேண்டாம் என்று உத்தரவிட்டதாகத் தெரிகிறது.
தமிழ் மாநில காங்கிரஸும், காங்கிரஸும் இணைந்த பிறகு புதிய நர்வாகிகள் இன்னும் அறிவிக்கப்படாமல்உள்ளது. ஒருங்கிணைப்புக் குழு மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக கட்சித் தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசனைநடத்துவதற்காக இளங்கோவன் டெல்லி புறப்பட்டுச் சென்றார். போன இடத்திலும் அவரை தமிழ்நாடு அரசியல்விடவில்லை.
-->