டெல்லி சென்றார் கிருஷ்ணா: வாஜ்பாயுடன் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

காவிரி ஆணையத்தின் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுமாறு வலியுறுத்த பிரதமர் வாஜ்பாயை கர்நாடக மாநில எம்.பிக்களுடன் இன்றுசந்திக்கிறார் முதல்வர் கிருஷ்ணா. இதற்காக இன்று காலை கிருஷ்ணா டெல்லி சென்றார்.

முன்னதாக அவர் நேற்றிரவே பிரதமரைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால், உடனே டெல்லிக்கு வர வேண்டாம் என கர்நாடகமுதல்வரிடம் பிரதமர் அலுவலகம் நேற்று தெரிவித்துவிட்டது.

இதனால் நேற்று மேற்கொள்ள இருந்த தனது டெல்லி பயணத்தை அவர் கடைசி நேரத்தில் ஒத்தி வைத்துவிட்டார். ஆனால், இன்றுஎம்.பிக்களுடன் சென்று பிரதமரை அவர் சந்திக்கிறார்.

இந் நிலையில் நாளை காவிரி கண்காணிப்புக் குழுவின் கூட்டமும் நடக்கிறது. மத்திய நீர்வத்துறை அமைச்சர் தலைமையில் நடக்கும் இந்தக்கூட்டத்தில் வறட்சி காலத்தில் தண்ணீரை பகிர்ந்து கொள்வது குறித்து விவாதிக்கப்படும்.

இந்த கண்காணிப்புக் குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கூறி இதன் கூட்டங்களை புறக்கணிக்க தமிழகம் திட்டமிட்டிருந்தது.ஆனால், இப்போது உச்ச நீதிமன்ற உத்தரவு இருப்பதால் நாளை நடக்கும் கூட்டத்துக்கு பிரதிநிதிகளை முதல்வர் ஜெயலலிதா அனுப்புவார்என்று தெரிகிறது.

இந்தக் கண்காணிப்புக் குழுவின் கூட்டம் முடிந்தவுடன் ஆணையக் கூட்டத்தையும் கூட்டி தமிழகத்துக்கு தண்ணீர் விடுவது தொடர்பாகமுடிவெடுக்க வேண்டும் என கர்நாடக முதல்வர் கிருஷ்ணா வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்துக்கு எவ்வளவு தண்ணீர் தருவது என்பது குறித்து ஆணையக் கூட்டத்தைக் கூட்டி பிரதமர் வாஜ்பாய் இறுதி முடிவு எடுக்கலாம்என்றும் அதுவரை தினமும் 1.25 டி.எம்.சி. நீரை தமிழகத்துக்குத் தர வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதுநினைவுகூறத்தக்கது.

இதனால் ஆணையத்தை எப்படியாவது மிக விரைவிலேயே கூட்ட வைத்து தமிழகத்துக்குத் தண்ணீர் தருவதை நிறுத்த கர்நாடகம் முயன்றுவருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+