டாக்டர் வராத மருத்துவமனை: கர்ப்பிணி பரிதாப சாவு

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்:

திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக அழைத்து வரப்பட்ட பெண், டாக்டர்கள் இல்லாத காரணத்தால்பிரசவ வலியால் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

கோவை மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தாமணி. இவர் நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார்.சனிக்கிழமை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை மாலையில் திருப்பூர் அரசுமருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர்.

ஆனால் டாக்டர்கள் யாரும் அப்போது பணியில் இல்லை. உடனடியாக டாக்டரை வரவழையுங்கள் என்றுமருத்துவமனை ஊழியர்களிடம் கூறியபோது அவர்கள், டாக்டர் வர்றப்ப தான் வருவாறு என்று அலட்சியமாகபதில் அளித்தனர்.

இந் நிலையில் சாந்தா மணி பிரசவ வலியால் துடிதுடித்தார். சிறிது நேரத்தில் வலி பொறுக்க முடியாத அவர்துடிதுடித்து இறந்தார். சாந்தா மணியின் உறவினர்கள் இந்த கொடூரத்தைப் பார்த்து கதறி அழுதனர்.

இச் சூழ்நிலையில் இரவு 10 மணிக்கு மேல்தான் டாக்டர்கள் கும்பல் மருத்துவமனைக்கே வந்தது.

பணிக்கு வராத அந்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை சாந்தாமணியின் உடலை திருப்பி எடுத்துப்போக மாட்டோம் என்று சாந்தா மணியின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+