மருத்துவமனையின் அலட்சியம்: மன நிலை பாதிக்கப்பட்ட பெண் மாயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட பெண்ணைக்காணவில்லை. அரசு மருத்துவமனையின் அலட்சியம் காரணமாகவே அவர் காணாமல்போய் விட்டதாகக்கூறப்படுகிறது.

அரசு பொது மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் ஒரு மன நிலை பாதித்த பெண்ணைஒரு ஆட்டோ டிரைவர் கூட்டி வந்தார். அவரைப் பரிசோதித்த அவசர பிரிவு டாக்டர்கள் அந்தப் பெண்ணுக்குஎக்ஸ்ரே எடுக்குமாறு கூறி அனுப்பினர்.

எக்ஸ்ரே எடுத்து விட்டு வந்த பின்னர் வார்டில் அனுமதிக்குமாறு கூறினர்.

வார்டு பாய்கள் அந்த பெண்ணை அழைத்துச்சென்றனர். ஆனால் அதற்குப் பிறகு அப் பெண்ணைக் காணவில்லைஎன்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

ஆனால் அந்தப் பெண்ணைப் பார்த்த, மருத்துவமனைக்கு வந்த சிலர் கூறுகையில், மிகவும் மனநிலை முற்றியநிலையில் அப்பெண் இருந்தார். வார்டுக்கு வெளியே நீண்ட நேரம் அவர் தனியாக உட்கார்ந்திருந்தார் என்றனர்.

மருத்துவமனையின் அலட்சியம் காரணமாக அப்பெண் எங்கேயோ போய்விட்டார்.

மருத்துவமனையின் அலட்சியப் போக்குக்கு பேன்யன் என்ற மன நிலை குன்றியோர் பாதுகாப்பு அமைப்பு கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+