தமிழகத்தை பிரிப்பது குறித்து கருத்தரங்கம் நடத்த ராமதாஸ் திட்டம்
சேலம்:
தமிழகத்தை இரண்டாகப் பிரிப்பது தொடர்பாக சென்னையில் விரைவில் கருத்தரங்கம் நடத்தவுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில், தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று நான் கூறியதால் என்னைப்பிரிவினைவாதி என்பது போலப் பார்க்கிறார்கள்.
மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், பிற்படுத்தப்பட்ட மக்களின் மேன்மைக்காகவும்தான் இந்தக் கருத்தைக் கூறினேன். இதை நான் தவறாகநினைக்கவில்லை. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இதுபோன்ற கோரிக்கைகள் உள்ளன.
சிலவற்றில் புது மாநிலங்களும் பிறந்துள்ளன. இதுதொடர்பாக சென்னையில் விரைவில் கருத்தரங்கம் நடத்தப்பட்டு விவாதிக்கப்படும்.
காவிரி- ஜெயாவுக்கு எதிர்ப்பு:
காவிரிப் பிரச்சினையைப் பொருத்தவரை ஜெயலலிதா தனித்து செயல்பட்டு வருகிறார்.
கர்நாடகத்தைப் போல, தமிழகத்திலும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனையைப் பெற்று செயல்பட வேண்டும். அப்போதுதான் தமிழகத்தின்குரல் ஒரே குரலாக ஒலித்து நமது கோரிக்கையை வலியுறுத்திப் பெற முடியும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications