அரசுக் கல்லூரி மாணவர்கள் பிச்சையெடுத்து போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசுக் கல்லூரி மாணவ-மாணவிகள் கையில் திருவோடு ஏந்திபிச்சையெடுக்கும் போராட்டத்தை இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தினர்.

அரசுக் கல்லூரி மாணவர்கள் தங்களுடைய போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டு வரும் திங்கள்கிழமைமுதல் வகுப்புகளுக்குத் திரும்புவதாக நேற்று செய்திகள் வெளியாகின.

ஆனால் அரசுக் கல்லூரி மாணவர்களில் ஒரு பிரிவினர் தான் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளனர்.அதிமுக மாணவர் அணிப் பிரிவினரைத் தவிர ஏராளமான மாணவர்கள் இன்னும் போராட்டக் களத்தில் தான்உள்ளனர்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக அவர்கள் இன்று பிச்சையெடுக்கும் போராட்டத்தை மேற்கொண்டனர்.

அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைக்கக் கூடாது, மேலூர் மற்றும் மதுரை மீனாட்சி கல்லூரிமாணவ-மாணவிகளைத் தாக்கிய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி பிச்சையெடுக்கும் போராட்டத்தை மாணவர்கள் நடத்தினர்.

சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்த இந்தப் போராட்டத்திற்கு இந்திய மாணவர்சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்டவை அழைப்பு விடுத்திருந்தன.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+