For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரையில் சாலைகளுக்காக "கொல்லப்படும்" மரங்கள்!!

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மதுரை மாநகரில் மேற்கொள்ளப்படும் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காக ஆயிரக்கணக்கான மரங்கள்வெட்டப்பட்டு வருகின்றன.

மதுரையில் சாலைகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஒரு கட்டமாக புறநகர்ப்பகுதிகள் மற்றும் பக்கத்து ஊர்களிலிருந்து மதுரைக்கு நேரடியாக சாலைகள் போடப்பட்டு வருகின்றன.

அவனியாபுரம், ஆணையூர், அழகர்கோவில், மேலக்கால் மற்றும் நத்தம் ஆகிய இடங்களிலிருந்து மதுரை நகருக்குபக்காவான சாலைகள் போடப்பட்டு வருகின்றன. இந்த சாலை அமைக்கும் பணிகளுக்காக சாலையோரம் உள்ள,மிகவும் வயதான, நீண்ட காலமாக மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பலனளித்து வந்த ஆயிரக்கணக்கான மரங்கள்வெட்டப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வருத்தமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். மரங்களை வெட்டாமலேயேசாலைகள் அமைக்குமாறு நெடுஞ்சாலைத் துறைக்கும், பொதுப்பணித்துறைக்கும் அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதற்கிடையே மதுரை மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட "கிரீன் பெல்ட்" திட்டம் வெற்றிகரமாகஅமல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான மரக் கன்றுகள்மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் நடப்பட்டன.

அவற்றில் 80 சதவீத மரக் கன்றுகள், நன்கு துளிர்த்து வளரத் தொடங்கியுள்ளன. இன்னும் இரண்டு அல்லதுமூன்றுஆண்டுகளில் மதுரை நகரில் பச்சை கம்பளம் விரித்தது போல, எங்கு பார்த்தாலும் மரங்களாக காணப்படும்என்று மாவட்ட வன அதிகாரி பாரதி தெரிவித்துள்ளார்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X