காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை அரிவாளால் வெட்டிய வாலிபர்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் தன்னைக் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை அரிவாளால் சரமாரியாக வெட்டி வாலிபர்,பின்னர் பயந்துபோய் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். தூத்துக்குடியில் இந்த சம்பவங்கள்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் கீதா. இவர் ஒரு கல்லூரி மாணவி. இவரை கணேசன் என்பவர் ஒருதலையாக காதலித்துவந்தார். பலமுறை தனது காதலை கீதாவிடம் அவர் கூறியும், கீதா அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கணேசன், நேற்று கீதா கல்லூரிக்குப் போகும்போது அவரை வழிமறித்துத் தன்னைஏற்றுக் கொள்ளும்படி கூறியுள்ளார். கீதா மறுக்கவே, கையோடு கொண்டு வந்திருந்த அரிவாளை எடுத்து கீதாவின்தலை மற்றும் கழுத்தில் பலமாக வெட்டினார்.
இதனால் நிலைகுலைந்த கீதா ரத்த வெள்ளத்தில் விழுந்தார். இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துகீதாவை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
கீதாவை வெட்டிய கணேசன் அவர் ரத்த வெள்ளத்தில் துடிப்பதைப் பார்த்து பயந்து போய் அங்கிருந்து ஓடினார்.தனது வீட்டிற்கு சென்ற அவர் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை செய்து கொள்ளமுயற்சித்தார்.
ஆனால் பின்னாலேயே துரத்தி வந்த பொதுமக்கள் அவரை மடக்கிப் பிடித்து போலீஸ் நிலையத்தில்ஒப்படைத்தனர்.
இந்தச் சம்பவம் தூத்துக்குடி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.