For Daily Alerts
Just In
"வித்-அவுட்" ரயில் பயணிகளிடமிருந்து ரூ.40,000 வசூல்
திசென்னை:
திசென்னை தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான புறநகர் மின்சார ரயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்தசுமார் 550 பேர் இன்று (செவ்வாய்க்கிழமை) பிடிபட்டனர். அவர்களிடமிருந்து ரூ.40,000 பணம் அபராதமாகவசூலிக்கப்பட்டது.
மதாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான மார்க்கத்தில் நாளுக்கு நாள் ரயில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது. இது ரயில்வே அதிகாரிகளுக்கு பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.
இதையடுத்து சென்னைக் கோட்ட ரயில்வே மேலாளர் ஜெயந்த் தலைமையில் 250 பேர் கிண்டி முதல் செங்கல்பட்டுவரை செவ்வாய்க்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் சுமார் 550 பேர் டிக்கெட் எடுக்காமல் பயணித்தது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து ரூ.40,000 வரைஅபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த சோதனை மூலம் செவ்வாய்க்கிழமை மட்டும் 50 சதவீதம் அதிக வருவாய்கிடைத்தது.
-->
Comments
chennai thatstamil southern railway chengalpattu tamilnadu ticket tamil news passenger electric train
Story first published: Tuesday, September 17, 2002, 5:30 [IST]