For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பட்டதாரி ஆசிரியர்களும் இனி "அட்டஸ்டேஷன்" போடலாம்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சான்றொப்பம் எனப்படும் "அட்டஸ்டேஷன்" வாங்குவதற்காக இனி அரசு அதிகாரிகளிடம் அலையவேண்டியதில்லை. யாராவது ஒரு பட்டதாரி ஆசிரியர் அல்லது தமிழ் ஆசிரியரிடம் வாங்கினாலே போதும்.

உயர் கல்விக்கு விண்ணப்பிக்கும்போதும், மத்திய, மாநில அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்கும்போதும்தாசில்தார் மட்டத்திலான அதிகாரி அல்லது டாக்டர்கள், அரசு இன்ஜினியர்கள், அரசு வழக்கறிஞர்கள், தலைமைஆசிரியர்கள் ஆகியோரில் ஒருவரிடம் நமது மதிப்பெண் பட்டியல் மற்றும் கல்விச் சான்றிதழ்களில் கையெழுத்துவாங்கி அனுப்ப வேண்டும்.

இதில் கையெழுத்துப் போட பல அதிகாரிகளும் ரூ. 50 கேட்டு தொல்லைப்படுத்தி வருகின்றனர். குறிப்பாகதாசில்தார்கள், டாக்டர்களிடம் போய் சான்றிதழ்களை நீட்டினால் காசை வாங்காமல் கையெழுத்துப்போடுவதில்லை.

வீட்டில் உள்ள நிதி சிரமங்களையும் மீறி உயர் படிப்புக்கு விண்ணப்பிக்கச் செல்லும் மாணவ, மாணவிகளை இந்தஅட்டஸ்டேசன் லஞ்சம் வெகுவாக பாதித்து வந்தது.

இந் நிலையில் பட்டதாரி ஆசிரியர்களும், தமிழ் ஆசிரியர்களும் இனிமேல் சான்றொப்ப கையெழுத்து இடலாம்என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு, அரசு உதவி பெறும் நகராட்சி, மாநகராட்சி மற்றும் ஊராட்சிப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரிஆசிரியர்கள் மற்றும் தமிழ் ஆசிரியர்கள் சான்றொப்பம் இடும் அதிகாரம் வழங்கப்படுவதாக அரசுசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் சுப்ரமணியன் நன்றிதெரிவித்துள்ளார்.

தமிழக அரசுக்கும், கல்வியமைச்சர் தம்பிதுரைக்கு இந்த நல்ல யோசனையை எடுத்துச் சொன்ன அதிகாரிகளுக்கும் அதை ஏற்றஅரசுக்கும் மாணவர்கள் சார்பில் நன்றி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X