சீட்டு பணத்தை கேட்ட மக்களை ஆள் வைத்து அடித்த பெண்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை தரமணி பகுதியில் ஏலச் சீட்டு பிடிப்பதாக கூறி ஒரு பெண் ரூ.6 லட்சம் மோசடி செய்ததாக புகார்கூறப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் வீட்டை பொதுமக்கள் இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தரமணி மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் லட்சுமி. இவர் அப்பகுதியில் ஏலச் சீட்டுப் பிடிப்பதாக கூறி பணம்வசூலித்து வந்தார்.

ஆனால் சீட்டு முடிந்ததும் அவர் யாருக்கும் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. இப்படியே ரூ.6 லட்சம் வரைஅவர் சேர்த்து விட்டதாகக் கூறப்படுகிறது.

பணம் கொடுக்காதது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

மேலும், பணம் கேட்டு வந்தவர்களை லட்சுமி தனது கணவர் ராமலிங்கம் மூலம் மிரட்டுவதும் ஆள் வைத்துஅடிப்பதுமாக இருந்துள்ளார்.

இதையடுத்து பணம் கட்டியவர்கள் அனைவரும் இன்று (புதன்கிழமை) லட்சுமியின் வீட்டை முற்றுகையிட்டுஉடனடியாக பணத்தைத் தருமாறு கேட்டனர். இதையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து வேளச்சேரி போலீஸார் விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினர். அவர்களது புகார் மீதுநடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறிய பிறகே பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+