மீனாட்சியம்மன் கோவில் முன்னாள் தக்கார் வீட்டில் கொள்ளை
ராங்கியம்:
மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் முன்னாள் தக்கார் வி.என். சிதம்பரத்தின் வீட்டில் ஏராளமான பணம் மற்றும்நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
மீனாட்சியம்மன் கோவிலின் முன்னாள் தக்காராக இருந்தவர் சிதம்பரம். புதுக்கோட்டை மாவட்டம் ராங்கியத்தில்இவருடைய வீடு உள்ளது. ஆனால் இங்கு யாரும் இல்லை. பாதுகாப்புக்காக அங்கு ஒரு காவலாளி மட்டும்இருந்தார்.
சிதம்பரம் தன் குடும்பத்தினருடன் சென்னையில் தான் இருக்கிறார். இதைப் பயன்படுத்திக் கொண்டகொள்ளையர்கள் நேற்று இரவு அவருடைய வீட்டிற்குள் புகுந்தனர். அங்கிருந்த காவலாளியைக் கத்தியால் குத்திகட்டிப் போட்டனர்.
வீட்டிலுள்ள பீரோவை உடைத்து ஏராளமான நகைகளையும் பணத்தையும் வெள்ளிப் பாத்திரங்களையும் அவர்கள்கொள்ளையடித்துச் சென்று விட்டனர். கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு குறித்து இன்னும்தெரியவில்லை. சிதம்பரம் சென்னையிலிருந்து வந்த பின்னர் தான் இது குறித்து தெரிய வரும்.
ராங்கியம் போலீசார் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்களுடன் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.