மேட்டூர் அணைக்கு வந்தது கபினி நீர்
சேலம்:
புலி வருது புலி வருது என்றரீதியில் கர்நாடகத்தில் இருந்து கிளம்பிய கபினி நீர் இப்போது தான் மேட்டூர் அணைக்கு வந்துசேர்ந்துள்ளது.
கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து திறந்து விட்டதாக கூறப்பட்ட தண்ணீர் வந்து சேராததால், மேட்டூர்அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்தது. 52 அடி அளவில் அணையின் நீர்மட்டம் இருந்தது.
இந் நிலையில் தற்போது மேட்டூர் அணைக்கு கபினி நீர் வந்து சேர ஆரம்பித்துள்ளது.
அணைக்கு விநாடிக்கு 3,426 கன அடி நீர் வருகிறது. அணையிலிருந்து 11,980 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுக்கொண்டுள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று பகல் நிலவரப்படி 52.03 அடியாக இருக்கிறது.
கபினி அணை நீர் தற்போதுதான் வந்து கொண்டிருப்பதாகவும், ஆயினும், குறைந்த அளவே நீர் வருவதால்அணையின் நீர்மட்டத்தில் பெரிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள்தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications