மதுரையில் ரூ.50,000 லஞ்சம் கேட்ட தாசில்தார் அதிரடி கைது

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரையில் நலப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ரூ.50,000 லஞ்சம் கேட்ட தாசில்தார் உள்ளிட்ட 3 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

மதுரை ஆணையூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜன். இவருக்கும் இன்னொருவருக்கும், நிலப் பிரச்சினை இருந்துவந்தது. தேவராஜனின் நிலத்தை அந்த நபர் தனது நிலம் என்று கூறி வந்துள்ளார்.

இதுதொடர்பாக மதுரை வடக்கு தாசில்தார் அலுவலகத்தை அணுகிய தேவராஜன் இந்தப் பிரச்சினை தொடர்பாகதாசில்தார் பழனியப்பனிடம் முறையிட்டார்.

அதற்கு பழனியப்பன், ரூ.50,000 கொடுத்தால் உங்களுடைய பெயரிலேயே அந்த நிலத்துக்கு பட்டா எழுதித்தருகிறேன் என்று தேவராஜனிடம் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ந்து போன தேவராஜன் லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.

பின்னர் போலீஸார் அறிவுரைப்படி பழனியப்பனைப் பார்க்கப் போனார் தேவராஜன். போலீஸார் கூறியபடி,எண்கள் குறிப்பிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களை பழனியப்பனிடம் தேவராஜன் கொடுத்தார்.

அதை பழனியப்பன் சந்தோஷமாக வாங்கிக் கொண்டிருந்த போது அங்கு மறைந்திருந்த போலீஸார் கையும்களவுமாக அவரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.

அவரோடு, கோட்டாட்சியரின் உதவியாளர் பால்ராஜ் மற்றும் ஸ்டாலின் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+