கள்ளத் துப்பாக்கி தயாரித்த 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
தர்மபுரி அருகே சட்ட விரோதமாக நாட்டுத் துப்பாக்கி தயாரித்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே யூபுரத்தைச் சேர்ந்த தாசன் என்பவரது தலைமையில் சட்டவிரோதமாகநாட்டுத் துப்பாக்கி தயாரிக்கப்படுவதாக போலீஸாருக்குப் புகார் வந்தது.
இதையடுத்து ராயக்கோட்டை அருகே கள்ளத் துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த தாசனை போலீஸார் கைதுசெய்தனர்.
அவருடன் இத்தொழிலில் ஈடுபட்டிருந்த மற்றொருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 2 களளத் துப்பாக்கிகள், உதிரி பாகங்கள், துப்பாக்கி தயாரிக்கப் பயன்படுத்தப்படும்மூலப்பொருட்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
-->












Click it and Unblock the Notifications