பொள்ளாச்சி அருகே பயங்கர தீ விபத்து: இளம்பெண் உடல் கருகி பலி
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஏற்பட்ட தீவிபத்தில் 17 வயது இளம்பெண் ஒருவர் உடல் கருகிபலியானார்.
பொள்ளாச்சி அருகே உள்ள தத்தூர். இங்குள்ள ஒரு குடிசையில் காயத்ரி என்ற 17 வயதுப் பெண் சமைத்துக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக குடிசையில் தீப்பிடித்துக் கொண்டது. இதில் அந்தப் பெண் பரிதாபமாக உடல்கருகி இறந்தார்.
இந்த தீ பக்கத்து குடிசைளுக்கும் பரவியதில் 10 குடிசைகள் வரை சேதமடைந்தன. தீயணைப்புப் படையினர்விரைந்து வந்து தீயை அணைத்து கருகிய பெண்ணின் உடலை மீட்டனர்.
இந்த தீ விபத்தில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்துகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காயத்ரி இருந்த வீட்டின் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததாலும், அவருக்கு அருகில் மண்ணெண்ணெய்கேன் ஒன்று கிடந்ததாலும் இது தற்கொலையாக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications