ஜெயேந்திரர் பதவியேற்பு பொன்விழா: கலாம் தலைமையில் குழு
காஞ்சிபுரம்:
காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதியாக ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பதவியேற்றதன் 50வது ஆண்டு விழாவைக் கொண்டாடஜனாதிபதி அப்துல் கலாம் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நிருபர்களிடம் கூறுகையில்,
ஸ்ரீ ஜெயேந்திரர் பீடாதிபதியாக பதவியேற்ற பொன் விழா வரும் 2003ம் ண்டு மார்ச் 22ம் தேதி முதல் ஓராண்டு காலத்துக்கு நடக்கவுள்ளது.காஞ்சியில் இந்த விழாவை ஜனாதிபதி அப்துல் கலாம் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த ஓராண்டு கொண்டாட்டங்களுக்கு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவுக்கு ஜனாதிபதி கலாமே தலைவராக இருப்பார்.இக் குழுவில் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் பிரதமர்களான நரசிம்ம ராவ், தேவே கெளடா, மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷிஉள்ளிட்டவர்கள் இடம் பெறுவர்.
இந்த பொன் விழாவையொட்டி காஞ்சிபுரம் சர்வதீர்த்தக் குளக் கரையில் உள்ள 15 சிவன் கோவில்களும் புதுப்பிக்கப்படும். மேலும் நாடுமுழுவதும் 50 முக்கிய நகரங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும்.
இந்த 50வது ஆண்டு கொண்டாட்டத்துக்காக மும்பையில் சிறப்பு அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
விழாவை முன்னிட்டு கண்காட்சியும் நடத்தப்படும். ஜெயேந்திரர் தங்கள் பகுதிக்கு வந்தபோது எடுத்த புகைப்படங்களை மக்கள் அனுப்பிவைக்கலாம். அவை கண்காட்சியில் வைக்கப்படும். அனுப்ப வேண்டிய முகவரி ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதிசுவாமிகள் பீடாரோஹண சொர்ண ஜெயந்தி மகோத்சவ அறக்கட்டளை, எண்-1, 4, கைலாஸ் பவன், பிளான் எண் 258, சியான் சாலை,சியான் மேற்கு, மும்பை-400022.
இந்த நிகழ்ச்சியையொட்டி ஜெயேந்திரரின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தை பி.பி.சி. தொலைக்காட்சி நிறுவனம் தயாரிக்க உள்ளதுஎன்றார்.
-->
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications