ஜெயேந்திரர் பதவியேற்பு பொன்விழா: கலாம் தலைமையில் குழு
காஞ்சிபுரம்:
காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதியாக ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பதவியேற்றதன் 50வது ஆண்டு விழாவைக் கொண்டாடஜனாதிபதி அப்துல் கலாம் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நிருபர்களிடம் கூறுகையில்,
ஸ்ரீ ஜெயேந்திரர் பீடாதிபதியாக பதவியேற்ற பொன் விழா வரும் 2003ம் ண்டு மார்ச் 22ம் தேதி முதல் ஓராண்டு காலத்துக்கு நடக்கவுள்ளது.காஞ்சியில் இந்த விழாவை ஜனாதிபதி அப்துல் கலாம் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த ஓராண்டு கொண்டாட்டங்களுக்கு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவுக்கு ஜனாதிபதி கலாமே தலைவராக இருப்பார்.இக் குழுவில் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் பிரதமர்களான நரசிம்ம ராவ், தேவே கெளடா, மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷிஉள்ளிட்டவர்கள் இடம் பெறுவர்.
இந்த பொன் விழாவையொட்டி காஞ்சிபுரம் சர்வதீர்த்தக் குளக் கரையில் உள்ள 15 சிவன் கோவில்களும் புதுப்பிக்கப்படும். மேலும் நாடுமுழுவதும் 50 முக்கிய நகரங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும்.
இந்த 50வது ஆண்டு கொண்டாட்டத்துக்காக மும்பையில் சிறப்பு அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
விழாவை முன்னிட்டு கண்காட்சியும் நடத்தப்படும். ஜெயேந்திரர் தங்கள் பகுதிக்கு வந்தபோது எடுத்த புகைப்படங்களை மக்கள் அனுப்பிவைக்கலாம். அவை கண்காட்சியில் வைக்கப்படும். அனுப்ப வேண்டிய முகவரி ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதிசுவாமிகள் பீடாரோஹண சொர்ண ஜெயந்தி மகோத்சவ அறக்கட்டளை, எண்-1, 4, கைலாஸ் பவன், பிளான் எண் 258, சியான் சாலை,சியான் மேற்கு, மும்பை-400022.
இந்த நிகழ்ச்சியையொட்டி ஜெயேந்திரரின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தை பி.பி.சி. தொலைக்காட்சி நிறுவனம் தயாரிக்க உள்ளதுஎன்றார்.
-->












Click it and Unblock the Notifications