மீன் பாடி வண்டி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை:
மீன் பாடி வண்டிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி சென்னையில் அவற்றின் உரிமையாளர்கள்ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை நகரில் "ஆட்கொல்லி வண்டி" என்று பெயர் பெற்றுள்ள மீன்பாடி வண்டிகளுக்கு சமீபத்தில் சென்னைஉயர்நீதிமன்றம் தடை விதித்தது.
இதற்கு மீனவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியும், எதிர்ப்பும் எழுந்தது.
காசிமேடு பகுதியில் தான் இந்த வண்டிகள் அதிக அளவில் புழங்குகிறது. அங்கிருந்து மீன்களை ஏற்றிக் கொண்டுநகரின் பல்வேறு பகுதிகளுக்கும் மீன்கள் விநியோகிக்கப்படுகிறது.
தற்போது மீன்பாடி வண்டிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதால் தங்களது பிழைப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிகாசிமேடு பகுதியில் மீன்பாடி வண்டி உரிமையாளர்கள் இன்று (திங்கள்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உடனடியாக மீன் பாடி வண்டிகளுக்கு அனுமதி தர வேண்டும் என்று அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தின் போதுகோஷமிட்டனர்.
இந்த வண்டிகளைக் கொண்டு இவர்கள் பல அப்பாவிகளைக் கொன்று குவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications