தமிழகம் எதிர்ப்பு: கண்காணிப்புக் குழுவின் மேட்டூர் வருகை ரத்து
சென்னை:
தமிழக அரசின் எதிர்ப்பையடுத்து காவிரி கண்காணிப்புக் குழு தனது மேட்டூர் வருகையை ரத்து செய்து விட்டது.
பெங்களூரில் கூடிய காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் கர்நாடகத்தில் உள்ள கபினி, ஹேரங்கி,கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளை நேரில் பார்வையிட முடிவு செய்யப்பட்டது. அதேபோல, தமிழகத்தின்மேட்டூர் அணையையும் பார்வையிட அக்குழு முடிவு செய்தது.
இதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தது. காவிரி கண்காணிப்புக் குழு கூட்டம் சுப்ரீம் கோர்ட்டை அவமதிக்கும்செயல் என்பதால் அதில் கலந்து கொள்ள முடியாது என்று கூறியது. அதேபோல மேட்டூருக்கும் காவிரிகண்காணிப்புக் குழு வரக்கூடாது என்றும் கூறி விட்டது.
இதுதொடர்பாக கண்காணிப்புக் குழு தலைவர் கோஸ்வாமிக்கு தமிழக தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வர்கடிதம் எழுதியுள்ளார். மீறி வந்தால் தமிழக அதிகாரிகள் கண்காணிப்புக் குழு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்புகொடுக்க மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தின் எதிர்ப்பையடுத்து மேட்டூர் வருகையை கண்காணிப்புக் குழு ரத்து செய்து விட்டது.
கெளடா எதிர்ப்பு:
காவிரி கண்காணிப்புக் குழுவினரை மேட்டூருக்கு வர விடாமல் தடுத்தன் மூலம் பிரதமரையே தமிழக அரசு கேவலப்படுத்திவிட்டதாக முன்னாள் பிரதமர்தேவே கெளடா கூறியுள்ளார்.
-->












Click it and Unblock the Notifications