கோவிலில் தீவிரவாதிகள் தாக்குதல்: ஜெ., ராமதாஸ் கண்டனம்
சென்னை:
குஜராத் கோவில் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு முதல்வர் ஜெயலலிதாவும், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்ராமதாசும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தேசத்தை சீர்குலைக்க நடக்கும் சதி. மக்கள் அமைதியைக்கடைபிடித்து அந்த முயற்சியை தோற்கடிக்க வேண்டும். அறிவியல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் நாடும் உலகமும் முன்னேறிக்கொண்டிருக்கும் இந்த நாட்களில் மதத்தைக் காரணமாக வைத்துக் கொண்டு தாக்குதல் நடப்பது மிகவும் சோகமானவிஷயமாகும்.
பாதிக்கப்பட்ட பக்தர்களின் குடும்பத்தினருக்கு தமிழகம் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ராமதாஸ்:
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீவிரவாதிகளின் இந்தச் செயல்கோழத்தனமானது. அப்பாவிகளை சுட்டுக் கொன்ற அந்தத் தீவிரவாத அமைப்பையும் அவர்களைத் தூண்டிவிட்டுவருபவர்களையும் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.
அனைத்து மாநில அரசுகளும் தீவிர நடவடிக்கை எடுத்து மதக் கலவரம் மூண்டுவிடாமல் தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதே போல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் நல்லகண்ணு, தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர்ஜவாஹிருல்லா, இந்து முன்னணித் தலைவர் ராமகோபாலன், மக்கள் தமிழ் தேசத் தலைவர் கண்ணப்பன் ஆகியோரும் இந்தத்தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications