தமிழக போலீசாருக்கு ஜெ. பாராட்டு
சென்னை:
அல்-உம்மா தீவிரவாதியான இமாம் அலியைச் சுட்டுக் கொன்ற தமிழகப் போலீசாரை முதல்வர் ஜெயலலிதாபாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று சென்னையில் அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,
தமிழகப் போலீசாரின் அபாரமான திறமை இன்று மீண்டும் வெளிப்பட்டுள்ளது.
உளவுத்துறையினர் அளித்த தகவல்களைத் தொடர்ந்து இமாம் அலியின் நடவடிக்கைகள் குறித்து தமிழகப்போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.
பெங்களூரில் இமாம் அலி பதுங்கியிருப்பதாக அறிந்தவுடன் தமிழகப் போலீசார் விரைந்து அங்கு சென்றனர்.
பின்னர் கடந்த 10 நாட்களாக இமாம் அலியின் நடவடிக்கைகளை நோட்டமிட்டு, அவர்களைச் சரணடையச்செய்ய முயற்சித்துள்ளனர். ஆனால் அந்த முயற்சிகள் பலனளிக்காததால் இன்று வெற்றிகரமாக அவனையும்அவன் கூட்டாளிகளையும் சுட்டுக் கொன்றுள்ளனர்.
இமாம் அலியும் அவனுடைய கூட்டாளிகளும் தப்பிச் செல்வதைத் தவிர்ப்பதற்காக போலீசார் சுட்டுள்ளனர். இந்தத்தாக்குதலில் தான் அந்த ஐந்து தீவிரவாதிகளும் இறந்து விட்டனர்.
தமிழகப் போலீசாரின் வீர தீரச் செயலுக்கு இது மற்றும் ஒரு எடுத்துக்காட்டு. மிகவும் அபாரமான துணிச்சலுடன்அவர்கள் இந்தக் காரியத்தை நடத்தியுள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications