மாறன் உடல்நிலை தொடர்ந்து மோசம்
சென்னை:
மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.
கடந்த ஜூலை மாதம் டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் மாறனின் இருதயத்தில் செயற்கை வால்வு ஒன்றுபுதிதாகப் பொருத்தப்பட்டது. இந்த அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து அவர் நலமாகஇருந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவருக்குக் கடும் காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்னை அப்பல்லோமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரைச் சோதித்துப் பார்த்த போது தான் அந்த செயற்கை வால்வில்பூஞ்சைத் தாக்குதல் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையிலேயே கடந்த 25ம் தேதி அறுவைச் சிகிச்சை மூலம்அவருடைய இருதயத்தில் பொருத்தப்பட்டிருந்த செயற்கை வால்வு மாற்றப்பட்டு, புதிய வால்வுபொருத்தப்பட்டது.
இதையடுத்து அவர் ஓரளவு உடல் நலம் தேறினாலும் கூட, அந்தப் பூஞ்சைத் தாக்குதல் மாறனின் ரத்த ஓட்டத்திலும்கலந்து விட்டதால் அவர் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்து வருகிறது.
தற்போது அவருடைய நுரையீரல் மற்றும் கிட்னி ஆகியவையும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரதமர் வாஜ்பாய் அடிக்கடி மாறனின் உடல்நிலை குறித்து அக்கறையுடன் விசாரித்து வருகிறார்.
-->












Click it and Unblock the Notifications