நெல்லை அருகே இடி தாக்கி பெண் சாவு
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே இடி தாக்கி ஒரு பெண் இறந்தார்.
ஆலங்குளம் அருகே உள்ளது சுரண்டை கிராமம். அங்கு வயலில் பெண்கள் சிலர் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர்.
அப்போது பலத்த இடியும், மழையும் வந்தது. இதையடுத்து பெண்கள் அனைவரும் மரத்தடியின் கீழ் ஒதுங்கினர்.
அப்போது இடி விழுந்ததில் மாரியமமாள் என்ற பெண் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சுரண்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications