For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கன்னட கொடிகளுடன் மிரட்டல்: பெங்களூர் உள்பட பல இடங்களில் பதற்றம்

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

தமிழகத்துக்கு தண்ணீர் விட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவால் கர்நாடகத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பெங்களூரிலும் காவிரி பாசனப் பகுதிகளிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூடுதல் டி.ஜி.பி. சுபாஷ் பரணிகூறினார்.

பெங்களூரில் ரோந்து அதிகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போலீஸ் படைகள்நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பெங்களூர் நகர இணை கமிஷ்னர் ஜீவன்குமார் காவ்ங்கர் கூறியுள்ளார்.

மாண்டியா உள்ளிட்ட அனைத்து மாவட்ட எஸ்.பிக்களும் எந்த நிலையையும் சமாளிக்க தயார் நிலையில் இருக்குமாறுஉத்தரவிடப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. மடியாள் தெரிவித்தார்.

தமிழகத்தை ஏமாற்ற திட்டம் தயார்:

இதற்கிடையே, கடந்த முறை செய்தது மாதிரி சில நாட்கள் மட்டும் நீரைத் திறந்துவிட்டுவிட்டு விவசாயிகள் போராட்டத்தைக் காரணமாகக்காட்டி நீரை நிறுத்திவிடலாமா என்று கர்நாடகம் சிந்துத்து வருவதாகத் தெரிகிறது.

மேலும் உச்ச நீதிமன்றம் ஆட்சியைக் கலைக்க உத்தரவிட்டால் கூட அடுத்து நடக்கும் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுவிடலாம் என்பதால்நீரைத் திறந்துவிட வேண்டாம் என்று பல்வேறு அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் கிருஷ்ணாவிடம் தெரிவித்துள்ளனர்.

நீரை விடாமல் இருந்து உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டால் கூட கர்நாடகத்துக்காக போராடிய தியாகி பட்டமும், அதனால் அரசியல்லாபங்களும் கிடைக்கும் என்பதையும் கிருஷ்ணாவுக்கு அவரது ஆதரவாளர்கள் சுட்டிக் காட்டி வருகிறார்கள்.

கன்னட கொடிகள்:

மைசூர், மாண்டியா, பெங்களூர் ஊரகப் பகுதிகளில் மஞ்சள், சிவப்பு நிறம் கொண்ட கன்னடக் கொடிகளை கார்கள், டிராக்டர்கள், லாரிகள்,வேன்கள், பைக்குகள், சைக்கிள்களில் கட்டிக் கொண்டு தமிழர் பகுதிகளில் கன்னட வெறியர்கள் சுற்றி வந்த வண்ணம் உள்ளனர்.தமிழ்நாட்டு எதிராகவும், தமிழர்களுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பிக் கொண்டுள்ளனர்.

இன்று காலை மாண்டியாவில் 2 கர்நாடக அரசுப் போக்குரத்துக் கழகப் பேருந்துகளை விவசாயிகளும் சமூக விரோதிகளும் தாக்கிசேதப்படுத்தினர்.

ராஜ்குமார் ரசிகர்கள் மிரட்டல்:

நெய்வேலியில் முற்றுகைப் போராட்டம் நடத்தி கர்நாடத்துக்கு மின்சார சப்ளையை நிறுத்தக் கோரினால், கர்நாடகத்தில் தமிழ் படங்கள்திரையிடப்படுவதைத் தடுப்போம் என ராஜ்குமார் ரசிகர்கள் சங்கத் தலைவரான சா.ரா.கோவிந்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூரில் தமிழ் படங்களை நம்பித்தான் பெரும்பாலான தியேட்டர்களே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழை விட்டால்இந்தியோ அல்லது ஆங்கிலப் படங்களோ தான் இங்குள்ள தியேட்டர்களில் ஓட்டப்படுகின்றன.

கன்னடப் படங்களின் உயர்ந்த தரம் காரணாக அதை பெங்களூரில் கன்னடர்களே கூட பார்ப்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நெய்வேலி போராட்டத்தில் காங்கிரஸ்:

இதற்கிடையே நெய்வேலியில் நடக்கும் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்கும் என தமிழக காங்கிரஸ் தலைவர்சோ.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார். நேற்று செயல் தலைவர் இளங்கோவன் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X