கிருஷ்ணா அரசை டிஸ்மிஸ் செய்ய வாஜ்பாயிடம் ஜெ. கோரிக்கை
சென்னை:
காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருவதால் அரசியல் சட்டப்பிரிவு 356ஐப் பயன்படுத்தி அம்மாநில அரசைக் கலைக்க வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாயிடம் தமிழக முதல்வர்ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்திற்கு காவிரியில் தினமும் 9,000 கன அடி (0.8 டி.எம்.சி.) நீரைத் திறந்து விட வேண்டும் என்று கடந்தவெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசுக்க உத்தரவிட்டது.
ஆனால் அதன் பிறகு ஒரு சொட்டு நீரைக் கூட தமிழகத்திற்கு கர்நாடகம் திறந்துவிடவில்லை.
ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பு நிலுவையில் உள்ள நிலையில் மீண்டும் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தின்தீர்ப்பை மீறியுள்ளது ஜனநாயகத்திற்கே பெரும் அச்சுறுத்தலைக் கொடுத்துள்ளது.
இனிமேலும் மத்திய அரசு இதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கக் கூடாது. அரசியல் சட்டத்தின் 256வதுபிரிவின் கீழ், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு பிரதமர் உத்தரவிடவேண்டும்.
இதையும் கர்நாடக அரசு மீறினால் அரசியல் சட்டத்தின் 365 மற்றும் 356 ஆகிய பிரிவுகளைப் பயன்படுத்திகிருஷ்ணா தலைமையிலான கர்நாடக அரசைக் கலைக்க வேண்டும் என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார்ஜெயலலிதா.
இதற்கிடையே நேற்று பெங்களூரில் கிருஷ்ணா கூறுகையில், என்னுடைய முதல்வர் பதவியே பறிபோனாலும்அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. சிறை செல்வதற்குக் கூட தயாராக இருக்கிறேன். ஆனால்தமிழகத்திற்கு மட்டும் நீர் திறந்து விட முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications