சென்னை அருகே கன்னடர்கள் என்று நினைத்து தாக்க முயற்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது வேன் மோதியது. வேனில் இருந்தவர்கள் கன்னடர்கள்என்று நினைத்த பொதுமக்கள் அவர்களைத் தாக்க முயன்றனர்.

ஆனால் அவர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்த பின்னர் தான் விட்டனர்.

சென்னை கொட்டிவாக்கம் பழைய மகாபலிபுரம் சாலையில் ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. ஒரு வளைவில்அந்த வேன் திரும்பியபோது முன்னாள் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் காயமடைந்தனர்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் கூடி விட்டனர். வேனில் இருந்தவர்களை கீழே இறங்கக் கூறியபோது அவர்கள்தெலுங்கில் பேசினர்.

ஆனால் அவர்கள் பேசியது கன்னடம் என்று நினைத்த பொதுமக்கள், எங்களுக்குத் தண்ணீர் தர மறுக்கும்கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களா நீங்கள் என்று ஆவேசமாகக் கேட்டபடி தாக்க முயன்றனர்.

ஆனால், தாங்கள் ஆந்திரவைச் சேர்ந்தவர்கள் என்று கூறிய பின்னர் தான் தாக்குதல் முயற்சியை கைவிட்டுஅவர்களிடம் மன்னிப்பு கோரினர்.

அதன் பின்னர் அந்த வேனை புறப்பட்டுச் செல்லவும் பொதுமக்கள் அனுமதித்தனர்.

தமிழகத்தில் முதன்முதலாக கன்னடர்களுக்கு எதிரான தீவிரப் போக்கு வெளிப்பட்டுள்ளது.

ஆனால், இது சரியானதல்ல. தமிழகத்தில் இதுவரை இன துவேஷத்துக்கு இடம் இருந்தது இல்லை. இனியும் இடம்தருவது சரியல்ல.

கன்னடர்களாகவே இருந்திருந்தாலும் அவர்களைத் தாக்குவது மிகவும் தவறான செயல் என்பதை நாம் உணரவேண்டும். ஒரு அரசும், அரசியல்வாதிகளும், கன்னட நடிகர்களும், கன்னட வெறியர்களும் செய்யும் தவறுக்காகஅப்பாவிகள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற செயல்கள் தமிழர்களாகிய நமக்கு அழகல்ல.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+