அரசு கல்லூரி ஆசிரியர்கள் ஸ்டிரைக் தொடங்கியது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அரசுக் கல்லூரி ஆசிரியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இன்று காலை தொடங்கியது.

பல்கலைக்கழகங்களுடன் அரசுக் கல்லூரிகளை இணைக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்திஆசிரியர்களும், மாணவர்களும் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று காலை தமிழகத்தில் உள்ள 67 அரசுக் கல்லூரி ஆசிரியர்களும் காலவரையற்ற ஸ்டிரைக்கைத்தொடங்கினர்.

ஆசிரியர்கள் அனைவரும் பணிக்குச் செல்லாமல் கல்லூரி வளாகங்களில் போராட்டம் செய்து வருகின்றனர். பலகல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு ஆதரவாக மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இன்று மாலை அனைத்து அரசுக் கல்லூரி ஆசிரியர்களும் அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் ஊர்வலம்செல்கின்றனர். இதேபோலவே தினமும் அவர்கள் போராட்டம் நடத்துவார்கள்.

பின்னர் வரும் 16ம் தேதி முதல் 17ம் தேதி வரை அரசுக் கல்லூரி வளாகங்களில் உண்ணாவிரதப் போராட்டம்நடைபெறும்.

இதுதவிர வரும் 18, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் சென்னை, மதுரை, கோவை, வேலூர், சேலம், திருச்சி, கடலூர்,தஞ்சாவூர் ஆகிய இடங்களிலுள்ள மண்டல கல்லூரி இயக்குநர் அலுவலகங்களில் முற்றுகைப் போராட்டம்நடைபெறும் என்றும் ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

மாணவர்களின் ஒப்பாரி போராட்டம்:

இதற்கிடையே திருச்சி அரசு பெரியார் கல்லூரி மாணவர்கள் நேற்று ஒப்பாரிப் போராட்டம் நடத்தினார்கள்.

திருச்சி ஈ.வே.ரா. பெரியார் அரசுக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் கூடி ஒப்பாரி வைத்தும், பாடையில்மாணவர்கள் படுத்திருப்பது போலவும் நூதனமான முறையில் போராட்டம் நடத்தினார்கள்.

இதேபோல, பாரதிதாசன் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களும் உண்ணாவிரதப் போராட்டம்நடத்தினார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+