கர்நாடகத்தில் அரசியல் மோதல்: பாத யாத்திரையை வாபஸ் பெறும் கிருஷ்ணா
பெங்களூர்:
காவிரியை வைத்து அரசியல் லாபம் தேட கர்நாடக முதல்வர் கிருஷ்ணா நடத்தி வரும் யாத்திரைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள்மற்றும் விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அதை நிறுத்திக் கொள்ள கிருஷ்ணா முடிவு செய்துள்ளதாகத்தெரிகிறது.
இது குறித்து தனது கட்சியின் தலைவர்களுடன் அவர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
எதிர்க் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே கர்நாடக முதல்வர் கிருஷ்ணா தனது அரசியல்பாதயாத்திரையை இன்று இரண்டாவது நாளாகத் தொடர்ந்தார்.
ஆனால், இந்த யாத்திரை மூலம் தனது அரசியல் செல்வாக்கை அதிகரிக்க கிருஷ்ணா முயல்வதாகவும் அதை உடனே நிறுத்தவேண்டும் எனவும் விவசாய சங்கங்கத்தின் தலைவர் மாடே கெளடா கூறினார். இன்று கிருஷ்ணாவை பாத யாத்திரையின்மத்தியில் சந்தித்த மாடே கெளாட இனி உங்களுக்கு ஆதரவு தர முடியாது என்று கூறிவிட்டுச் சென்றார்.
அதே போல கிருஷ்ணாவின் யாத்திரைக்குப் போட்டியாக தானும் ஒரு இயக்கம் நடத்தப் போவதாக முன்னாள் பிரதமரும்மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவெ கெளடா இன்று அறிவித்தார்.
இனி கிருஷ்ணா கூட்டம் கூட்டங்களில் கண்ணை மூடிக் கொண்டு பங்கேற்க மாட்டோம் என பா.ஜ.கவும் அறிவித்துள்ளது.
இதுவரை காவிரி விவகாரத்தில் தனக்கு முழு ஆதரவு தந்த கட்சிகளும் விவசாய சங்கங்களும் தன்னை விட்டு விலகுவதால்கலவரமடைந்துள்ளார் கிருஷ்ணா.
மேலும் கர்நாடகத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீவிர நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில் பிறகட்சிகளின் ஆதரவு இல்லாவிட்டால் பிரச்சனையில் சிக்குவோம் என்பதை உணர்ந்த கிருஷ்ணா தனது பாத யாத்திரையை நிறுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளார்.
பெரும்பாலும் நாளை இந்த யாத்திரை கைவிடப்படும் என்று தெரிகிறது.
காலை தொடங்கிய யாத்திரை:
முன்னதாக இன்று காலை எதிர்ப்புகளை ஒதுக்கித் தள்ளிவிட்ட கிருஷ்ணா பிதாதி என்ற இடத்தில் இருந்து தனது யாத்திரையைஇன்று துவக்கினார். நேற்று பெங்களூரில் இருந்து புறப்பட்ட அவர் பிதாதியில் இரவு தங்கினார்.
இன்று அவர் ராமநகரம் வரை நடப்பார். அவருடன் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும் அமைச்சர்களும் இந்தயாத்திரையில் பங்கேற்றுள்ளனர். யாத்திரை நடந்த இடங்களில் எல்லாம் பதற்றமும் பற்றிக் கொண்டது. பல இடங்களிலும் அச்சம்காரணமாக கடைகள் அடைக்கப்பட்டுவிட்டன.
வழியில் விவசாயிகளிடையே பேசிய கிருஷ்ணா, உங்களுக்காக எந்த தியாகத்துக்கும் நான் தயார் என்றார்.
ஆனால், இப்போது பிரச்சனை முற்றுவதால் யாத்திரையை கைவிட முடிவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications