For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேட்டூர் அணை மூடப்பட்டது

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

தண்ணீரின் அளவு மிகவும் குறைந்துவிட்டதாலும் காவிரி டெல்டா பகுதிகளில் மழை பெய்யத்தொடங்கியுள்ளதாலும், மேட்டூர் அணை இன்று மூடப்பட்டது. 33 நாட்களுக்குப் பிறகு இன்று முதல் அங்குதண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டுவிட்டது.

காவிரி டெல்டாப் பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணைதிறக்கப்படுவது வழக்கமான ஒன்று. ஆனால் அணையில் தண்ணீர் இல்லாததாலும், கர்நாடகத்தின் பிடிவாதப்போக்கினாலும் தண்ணீர் இல்லாத காரணத்தால் இந்த ஆண்டு குறுவை சாகுபடியே இல்லாமல் போய்விட்டது.

இந் நிலையில் சம்பா சாகுபடிக்காக கடந்த மாதம் 6ம் தேதி தான் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. கடந்த 33நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இப்போது அணை வற்ற ஆரம்பித்துவிட்டது.

இதற்கிடையே காவிரி பாசனப் பகுதியில் மழை பெய்யவும் தொடங்கியுள்ளது. இதையடுத்து மேட்டூர் அணைமூடப்பட்டு விட்டது.

இப்போது மேட்டூர் அணையில் 34.86 அடி தான் நீர் இருப்பு உள்ளது. இது குடிநீர்த் தேவைக்குத் தான்போதுமானதாக இருக்கும். தமிழகத்தில் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் இருந்து அணைக்கு வினாடிக்கு 4,057 கன அடிநீர் வந்துகொண்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X