எங்கே பிரபுதேவா அண்ட் கோ?
சென்னை:
கன்னட நடிகர்கள் தமிழகத்தில் கடும் கண்டனத்தை எதிர்கொண்டு வரும் நிலையில் கர்நாடகத்தைச் சேர்ந்த தமிழகநடிகர்களான அர்ஜூனும், முரளியும் பாரதிராஜா மற்றும் விஜயகாந்த் ஏற்பாடு செய்யும் ஒவ்வொரு கூட்டத்திலும்ஆஜராகிவிடுகின்றனர்.
ஆனால் மற்ற கன்னட நடிகர்களான பிரபு தேவா, அவரது அண்ணன் ராஜு சுந்தரம், பிரகாஷ் ராஜ், சரண் ராஜ்உள்ளிட்ட கன்னடத்துக்கார கலைஞர்களை எங்கேயும் பார்க்க முடியவில்லை. பிரகாஷ் ராஜ் பெங்களூரில்இருப்பதாக கூறப்படுகிறது.
பிரபு தேவா சென்னையில்தான் இருந்தாலும் தலையையே காணவில்லை. ராஜு சுந்தரம் அப்படியே.ஷூட்டிங்கை கூட அவர் கேன்சல் செய்து விட்டு பதுக்கிவிட்டார்.
கர்நாடகத் திரையுலகம் காவிரிப் பிரச்சினையில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்ததால் ஆத்திரமடைந்த தமிழ்த்திரையுலகம் நெய்வேலியில் போராட்டம் நடத்துகிறது.
அதற்குப் போட்டியாக ரஜினி தனியாக உண்ணாவிரதம் இருக்கவுள்ளார்.
இதிலும் அர்ஜூன், முரளி பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications