மதமாற்ற தடை சட்டம்: 24ம் தேதி கிருஸ்தவ, முஸ்லீம் அமைப்புகள் உண்ணாவிரதம்
மதுரை:
கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கண்டித்து சென்னையில் வருகிற 24ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம்நடத்த கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
மதுரையில் பல்வேறு கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மத அமைப்புகளின் கூட்டம் நடந்தது. இதில் கட்டாயமதமாற்றத் தடைச் சட்டத்தைக் கண்டித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் மதுரை ஆர்ச் பிஷப் ஆரோக்கியசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழக அரசின் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கண்டித்து அறவழியில் வருகிற 24ம் தேதி சென்னையில்ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளோம்.
உண்ணாவிரதம் இருக்கும் நாளில் தமிழகம் முழுவதிலும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்புகளைச் சேர்ந்தகல்வி நிறுவனங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும்.
அதேபோல, இந்தச் சட்டத்தை எதிர்த்து கோர்ட்டிலும் வழக்குத் தொடருகிறோம். இந்த சட்டத்திற்கு ஆதரவு தரவேண்டாம் என்று அனைத்துக் கட்சி எம்.எல்.ஏக்களையும் கேட்டுக் கொள்கிறோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications