தமிழகத்தில் முதலீடு செய்யுங்கள்": சிங்கப்பூருக்கு ஜெ. அழைப்பு
சென்னை:
சிங்கப்பூர் அரசும் தொழிலதிபர்களும் தமிழகத்தில் ஏராளமான தொழில் முதலீடுகளைத் தொடங்க வேண்டும் என்றுமுதல்வர் ஜெயலலிதா அழைப்பு விடுத்தார்.
சிங்கப்பூர் தேசிய வளர்ச்சித்துறை இணை அமைச்சரான டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தலைமையிலான 40பேர் கொண்ட தொழில்முனைவோர் குழுவினரிடம் ஜெயலலிதா பேசுகையில்,
சீனாவின் பொருளாதாரத் தலைநகரமாக ஷாங்காய் நகரம் விளங்குவதைப் போலவே இந்தியாவின்பொருளாதாரத் தலைநகரமாக சென்னை மாற வேண்டும் என்பதே எங்கள் கனவு.
அதை மெய்ப்பிக்கும் வகையில் தகவல் தொழில்நுட்பம், வீட்டுவசதி, தொழிற்சாலைகள் உள்ளிட்ட தமிழகத்தில்உள்ள பல துறைகளிலும் சிங்கப்பூர் தொழிலதிபர்கள் தாராளமாக முதலீடு செய்யலாம்.
அதேபோல் பல உற்பத்தித் தொழிற்சாலைகளையும் சிங்கப்பூர் நிறுவனங்கள் சென்னை உள்ளிட்ட தமிழகநகரங்களில் தொடங்க வேண்டும். இதன் மூலம் இருவருமே தொழில்துறையில் நல்ல லாபம் ஈட்ட முடியும்.
ஏற்கனவே தமிழகத்தில் உள்ள பல பொதுத்துறை நிறுவனங்களிலும் தனியார் துறையினர் முதலீடு செய்வதற்கானதிட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications