திருச்சி அரசு கல்லூரி மாணவர்கள் "தூக்கில் தொங்கி" போராட்டம்

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி திருச்சி ஈ.வெ.ரா.கல்லூரி மாணவர்கள் இன்று தூக்கில் தொங்குவது போல போராட்டம் நடத்தினார்கள்.

தமிழகத்திலுள்ள 67 அரசுக் கல்லூரிகளையும் அந்தந்த பல்கலைக்கழகங்களுடன் இணைப்பதை எதிர்த்து கடந்த8ம் தேதி முதல் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

ஆசிரியர்களின் இந்தப் போராட்டத்திற்கு அரசுக் கல்லூரி மாணவ-மாணவிகளும் ஆதரவு தெரிவித்துபோராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று திருச்சி ஈ.வெ.ரா. அரசுக் கல்லூரி மாணவர்கள் நூதனப் போராட்டம்நடத்தினார்கள்.

தூக்குக் கயிற்றைக் கழுத்தில் கட்டிக் கொண்டு தூக்கில் தொங்குவது போல நடித்து அம்மாணவர்கள் போராட்டம்நடத்தினர். இந்தப் போராட்டத்தின் போது அவர்கள் அரசுக்கு எதிராகப் பல்வேறு கோஷங்களையும்எழுப்பினார்கள்.

இதற்கிடையே மதுரை மீனாட்சி அரசுக் கல்லூரி மாணவிகள் மற்றும் கோயம்புத்தூர் அரசுக் கல்லூரிமாணவர்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகம்ஆகியவற்றின் அலுவலர்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+