பாரதிராஜாவுடன் மோதிக் கொண்டே புறப்பட்ட சரத், போகாத ராதிகா, கழன்று கொண்ட டி.ராஜேந்தர்
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை இயக்குனர் பாரதிராஜா கடுமையாக விமர்சித்ததற்கு நடிகர் சரத்குமார் கடும் கண்டனம்தெரிவித்துள்ளார்.
இன்று காலை நெய்வேலிக்கு புறப்படும் வரை பாரதிராஜாவும் சரத்குமாரும் மோதிக் கொண்டனர். இருவருமே ஒருவரை ஒருவர்முறைத்துக் கொண்டே நெய்வேலிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
சரத்குமாரின் மனைவியும் நடிகையுமான ராதிகா தனக்கு உடல் நலமில்லை என்று கூறிவிட்டு நெய்வேலி போகவில்லை.
கலையுலகினரை நெய்வேலி அழைத்துச் செல்ல சரியான ஏற்பாடுகள் செய்யவில்லை என்று கூறிய திமுக எம்.எல்.ஏவானடி.ராஜேந்தர் கடைசி நேரத்தில் பஸ்சில் ஏறாமல் திரும்பிச் சென்றார்.
முன்னதாக பாரதிராஜா விடுத்த அறிக்கையில், கலைஞர் கருணாநிதியும் மிகவும் கீழ்த்தரமான அரசியலுக்குப்போய்விட்டார். நெய்வேலி போராட்டம் வெற்றிகரமாக நடந்து விட்டால் அது ஜெயலலிதாவுக்கு நல்ல பெயரைப்பெற்றுக் கொடுத்து விடும் என்று நினைத்து சரத்குமார், நெப்போலியன் ஆகியோரை போக வேண்டாம் என்றுகூறினார்.
ஆனால், தங்கள் தலைவரோடு சேர்த்து தங்களையும் மக்கள் ஒதுக்கி விடுவார்கள் என்ற காரணத்தால்போராட்டத்தில் கலந்து கொள்ளப் போவதாக இந்த நடிகர்கள் அறிவித்துள்ளனர்.
கருணாநிதியைப் போய் நான் ஏன் பார்க்கவில்லை என்று சரத்குமார் கேட்டுள்ளார். யார் இந்த கருணாநிதி?அவரைப் போய் நான் ஏன் சந்திக்க வேண்டும் என்று கூறியிருந்தார் பாரதிராஜா.
இதற்கு சரத்குமார் மிகக் கடும் கண்டனம் தெரிவித்தார். திமுக நடிகர்களுடன் தனியே புறப்பட்ட சரத்குமார்நிருபர்களிடம் பேசுகையில்,
பாரதிராஜாவின் அறிக்கை மூலம் இந்தப் போராட்டம் குறித்தே மீண்டும் எங்களுக்கு சந்தேகம் வருகிறது. ஆனால்,நல்ல நோக்கத்துக்காக குரல கொடுக்கிறோம், இதில் திமுகவால் பிளவு வரக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காகபோராட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட்டுச் செல்கிறேன்.
கலைஞர் குறித்துப் பேச பாரதிராஜாவுக்கு எந்த அருகதையும் இல்லை என்றார்.
இதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த பாரதிராஜா எதுவும் பேசாமல் பஸ்சில் ஏறி உட்கார்ந்தார்.
நேற்று வரை சண்டை போட்ட இவர்கள் இன்று காலை போராட்டத்துக்கு புறப்படும்போது கூட ஒற்றுமையாகபோகவில்லை.
மழை விட்டாலும் தூவானம் விடாது போலிருக்கிறது...