காவிரி: நெடுமாறன் தலைமையில் கைதிகள் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
நெய்வேலி போராட்டத்துக்கு ஆதரவாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் 1,300 கடலூர் சிறைக்கைதிகள் இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 9ம் தேதி தமிழக பந்த் நடந்தபோது கோவை சிறைக் கைதிகள் 2,000 பேர் உண்ணாவிரதம் இருந்தது நினைவுகூறத்தக்கது.
இப்போது பொடா சட்டத்தில் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பழ.நெடுமாறன் தலைமையில் இந்த உண்ணாவிரதம்நடக்கிறது.
இன்று காலை உணவை அருந்த மறுத்த அவர்கள், மதிய உணவும் தயாரிக்க வேண்டாம் என்று சிறை அதிகாரிகளிடம்தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications