மதுரையில் ரஜினி ரசிகர்கள் இன்றே உண்ணாவிரதம்: ப.சி. துவக்கி வைத்தார்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

ரஜினியையே முந்திக் கொண்டு அவரது மதுரை ரசிகர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

காவிரியில் நீர் கோரி நாளை ரஜினி உண்ணாவிரதம் நடத்தவுள்ளார். தனது ரசிகர்களை சென்னை வர வேண்டாம் என்றுஅறிவுறுத்தியுள்ள அவர், மாவட்ட தலைநகர்களில் நாளை உண்ணாவிரதம் இருக்குமாறு கூறினார்.

ஆனால், அவரது மதுரை ரசிகர்கள் ரசிகர் மன்ற மாவட்டத் தலைவர் ஜாபர் தலைமையில் இன்றே உண்ணாவிரதம் இருந்தனர்.சுமார் 800 பேர் இன்று காலை முதல் இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தை காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைத் தலைவர் ப.சிதம்பரமும் திமுக தலைவர் கருணாநிதியின் மகன்அழகிரியும் துவக்கி வைத்து வாழ்த்திப் பேசினர்.

அப்போது நிருபர்களிடம் பேசிய சிதம்பரம்,

கர்நாடக அரசு மீது அரசியல் சட்டம் 256-வது பிரிவின் கீழ் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவு, காவிர ஆணையத்தின் தீர்ப்பு ஆகிய எதையும் மதிக்காமல் இஷ்டப்படி நடந்து வருகிறதுகர்நாடகம். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு விடப்பட்டுள்ள மிகப் பெரிய சவால்.

பழுத்த அரசியல்வாதியான கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் போக்கு இந்திய ஜனநாயகத்திற்கு விழுந்தஅடியாகும்.

எனவே மத்திய அரசு உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு 256-வது பிரிவைப் பயன்படுத்த வேண்டும்என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+